ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க எளிய வழி..!!

               கருப்பு உலர்ந்த திராட்சை; 
                       
         ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும்.8 கிராமுக்கு கீழே குறையும்போது ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

          ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

           ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது, ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது, நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்சிஜனை, ரத்தம் ஏற்று உற்சாகமும் பெறுகிறது.

      பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை, கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.
பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது.நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை, ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவற்றை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
                     

        கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி, ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் சிாிது பழங்களை மாலையில் போட்டு, இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.

     காலையில், சிாிது பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
      மதியம், சிாிது பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
    மாலை, கடைசியாக உள்ள பழத்தை சாப்பிட்டு விட்டு, மீதியுள்ள நீரை குடியுங்கள்.

      இதே மாதிரி, தினசரி ஒரு திராட்சை வீதம், ஒரு வேளைக்கு அதிகப்படுத்தி, பத்து நாட்கள் வரை சாப்பிட வேண்டும். பின் ரத்தத்தை பரிசோதித்தால் மாற்றம் இருப்பதை அறியலாம்.

       உலர் திராட்சையின் நன்மைகள்: உலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனை அப்படியே அல்லது நீரில் ஊற வைத்து, கொதிக்க வைத்து சாப்பிட்டாலாம் 

மருத்துவப் பயன்கள்:

1) ரத்தசோகையை கட்டுப்படுத்தும்.

2) மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.

3) கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

4) மலச்சிக்கல் சரியாகும்.
தொண்டை கரகரப்பு குணமடையும்.

5) மூலநோய் குணமடையும். உடல் எடை அதிகரிக்கும்.

6) குழந்தை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வளர்வார்கள்.

Comments