சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க..!!

 சிறுநீரக் கல்;

        இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.   சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் அதன் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும். 

 சிறுநீரை அடக்கும் பழக்கமே சிறுநீரக் கல் உருவாக மிக மிக முக்கியக் காரணம்.

அறிகுறிகள்;
       முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.

தைராய்டு பிரச்சினை;
      பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

வீட்டு வைத்தியம்;
         சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 3 முறையாவது குடிப்பது அவசியம்.


        பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் இரண்டு முறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம். வாழைத்தண்டு

       முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

        வெள்ளரிப்பிஞ்சு சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
   
          தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் சிறுநீரக கற்கள் உருவாவதைத் சுலபத்தில் தடுக்கலாம்.

துளசி இலை;
       இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து பத்து நாட்கள் உண்டால், கல் உடந்து விடும். 

திராட்சை;
      இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

ஆப்பிள்;
         சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

வாழைத்தண்டு;
      வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை  கரைக்கும் திரன் உண்டு. வாரம் ஒருமுறை வாழைத்தண்டு பொரியல் சாப்பிடலாம் இது மிகவும் பிரபலமான ஒரு முறையும் கூட. 

இளநீர்;
         இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

எதை சாப்பிடக்கூடாது;
    சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் அவைகள்

உப்பு பிஸ்கட், சிப்ஸ்,

 கடலை, பாப்கான், 

அப்பளம், வடகம்,

 வற்றல், ஊறுகாய், 

கருவாடு, உப்புக்கண்டம்,  பாதாம், 

பிஸ்தா, கேசரி பருப்பு, 

கொள்ளு, துவரம் பருப்பு,

 ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா

 உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ்

      ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


Comments