இதய நோய்களைத் தடுக்க உதவும் வேர்கடலை..!!


           பல நோய்களுக்கு மருந்தாக வேர்கடலை இருக்கிறது. வேர்கடலையை நேரடியாக உட்கொள்ள முடியாதவர்கள் பீணட் பட்டரை பிரட்டுகளில் தடவி சாப்பிடலாம். வேர்கடலை.யின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
வேர்க்கடலையில் சரியான அளவு புரதம், ஒமேகா -3, ஒமேகா -6, ஃபைபர் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை உள்ளது. அவை நம் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

        வேர்க்கடலையில் புரதம் அதிகமாக உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் சுமார் 26 கிராம் புரதம் உள்ளது. இது நமது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.

        சிலர் பால், தயிர்களை சாப்பிட மாட்டார்கள் அவர்கள் பாலுக்கு பதிலாக வேர்க்கடலையை உட்கொள்வது சிறந்த மாற்றாகும்.

           உடலில் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது இதயத்திற்கு நன்மை பயக்கும்.

        உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க வேர்க்கடலை உதவி செய்கிறது.

         நீரிழிவு நோயாளிகளுக்கு வேர்க்கடலை சிறந்தது. நிலக்கடலை உடலில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க வேலை செய்கிறது. வேர்க்கடலையை சாப்பிடுவது உங்கள் சர்க்கரை அளவை மேம்படுத்தும்
வேர்க்கடலையில் கணிசமான அளவு கொழுப்பு உள்ளது.ஆனால் அது உடல் எடையை குறைக்க உதவும். வேர்க்கடலையில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து எடையை குறைக்க உதவுகிறது.

        வேர்க்கடலையை சாப்பிடுவதால் உடலுக்கு குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் கிடைக்கும். எனவே வேர்க்கடலை சாப்பிடுவது நிறைந்ததாக உணர்த்துகிறது. அதனால் விரைவில் உங்களுக்கு பசி ஏற்படாது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வேர்க்கடலை மிகவும் நன்மை பயக்கும். வேர்கடலையிலிருந்து கிடைக்கும் ஃபோலேட் உடலில் உள்ள செல்களைப் பிரிக்க உதவுகிறது. ஃபோலேட் குழந்தை கருப்பையில் உள்ளபோது மூளை பிரச்சினைகளிலிருந்து தடுக்கிறது

சத்துகள்;

       நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதில் முக்கியமான சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.    

இதயம் காக்கும்;

        நிலக்கடலையைத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் (Monounsaturated fats), ஒலீக் அமிலம் (Oleic Acid) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது. குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாள்கள் நிலக்கடலையைச் சாப்பிட்டு வருவது இதய நோய்களைத் தடுக்க உதவும்.

தசைகளை வலிமையாக்கும்;

        நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு.

கொழுப்பைக் குறைக்கும்;

         நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் எல்.டி.எல். (Low-density lipoprotei) எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் எச்.டி.எல். (High-density lipoprotein - HDL) கொழுப்பை அதிகப்படுத்துகிறது.

மன அழுத்தம் போக்கும்;

       நிலக்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.

நினைவாற்றல் அதிகரிக்கும்;

     இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.


புரோட்டின் நிறைந்தது;

       கடலையில் அதிகளவு புரோட்டின் உள்ளது. அதேபோல இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி நிறைந்துள்ளது. அதாவது, இறைச்சி உணவை விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலை சாப்பிடலாம்.

இளமை பராமரிக்கும்;

        இதிலுள்ள சத்துகள் முதுமையைத் தள்ளிப்போடுவதுடன், இளமையைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது.

கருப்பைக் கோளாறுகள் நீங்கும்;

         நிலக்கடலையில் உள்ள சத்துகள் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. குறிப்பாக நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகளவு உள்ளது. ஆகவே பெண்கள் தினமும் 400 கிராம் என்ற அளவில் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் மார்பகக்கட்டி ஏற்படாமல் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளன. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

பித்தப்பை கல் கரைக்கும்;

       நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

எலும்புக்கு வலிமை தரும்;

         நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

Comments