புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் மிக்க கண்டங்கத்திரி..!!


    கத்தரி வகையில் உயர்ந்த மருத்துவகுணம் நிறைந்தது கண்டங்கத்திரி.

"கண்டங்கத்திரி"
கண்டங்(கழுத்து)+ கத்திரி

கழுத்து பகுதியில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கத்தரித்து விடும் என்பதால் இதற்கு கண்டங்கத்தரி என பெயர் பெற்றது
இவற்றிற்கு கோழை அகற்றி என பெயரும் உண்டு.
2020 ல் இந்தியாவில் சுமார் 50 கோடி பேருக்கு புற்றுநோய் இருக்கும் என மதிப்பிட்டு ..

புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்க ஐரோப்பிய, அமெரிக்க கம்மெனிகள் தயாராகி வருவது எத்தனை பேருக்கு தெரியும்

கத்தரிக்காயை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்த
கண்டங்கத்தரியை
பயன்படுத்தி உடல் நலத்தை பேணுவோம்.

புற்றுநோய் வராமல் தடுப்போம்.
சுன்டக்காயை போல உடைத்து விதையை எடுத்துவிட்டு சமையல் செய்யலாம்.

கண்டங்கத்திரியின் நன்மைகள்:-


             கண்டங்கத்திரி ஒரு பழங்கால விரும்பத்தக்க தாவரமாகும். பழங்காலத்தில் இதை சமையல் செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தினர். கண்டங்கத்திரியின் தாவரவியல் பெயர் சொலானம் சரடென்ஸ் என்பதாகும். இந்த தாவரம் முழுவதும் முட்களால் சூழப்பட்டிருக்கும். இது எளிதாக கிடைக்கும் ஒரு தாவரம் ஆகும். இதன் அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகிறது. கண்டங்கத்திரி முக்கியமாக இருமல், சளி மற்றும் குளிரினால் வரும் காய்ச்சல் போன்ற அனைத்து சுவாச நோய்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறத

ஆக்ஸிஜனேற்றம்;

       கண்டங்கத்திரியில் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு அதிகமாக உள்ளது. அதனால் விரும்பத்தகாத பக்க விளைவுகளை திறம்பட குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக கண்டங்கத்திரி இலை மற்றும் பழச்சாறு இரண்டும் பயன்படுத்தப்படுகிறது.

பக்டீரியா எதிர்ப்பு ;

        கண்டங்கத்திரியின் மிகவும் குறிப்பிடதக்க பயன்பாடு பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கை தான். இந்த தாவர இலையின் சாறு ஷிகேல்லா டைசெண்ட்ரியா பாக்டீரியா தவிர மற்ற அனைத்து பாக்டீரியங்களுக்கும் எதிராக செயல்படுகிறது. உண்மையில் இது பாக்டீரிய தொற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கல்லீரல் பாதுகாப்பு:

     கண்டங்கத்திரியின் இலைகள் நச்சுத்தன்மையை நீக்கி கல்லீரல் பாதிப்படைவதை தடுக்கிறது என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது. இந்த கண்டங்கத்திரி இலையின் சாற்றை முதலில் ஒரு முயலுக்கு கொடுத்து சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையின் முடிவில் முயலின் கல்லீரலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நிரூபணமாகியிருக்கிறது.

 பல்லீறு நோய்கள்:

        கண்டங்கத்திரியின் விதைகள் பல்லீறு நோய்களை குணப்படுத்தும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. கண்டங்கத்திரி விதைகளை நிழலில் காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலில் சிறிது கடுகு எண்ணெய் விட்டு ¼ தேக்கரண்டி காய்ந்த விதை போட்டு வறுக்கும் போது வரும் புகையை நோயாளியின் வாயில் ஒரு குழாய் மூலம் செலுத்த வேண்டும். இது போன்று 4 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் 75% நோயாளிகள் குணமடைகின்றனர்.

சளி மற்றும் இருமல்;

       கண்டங்கத்திரியின் வேர் இருமலுக்கு ஒரு நல்ல தீர்வைக் கொடுக்கிறது. கண்டங்கத்திரின் வேரை கஷாயம் வைத்து குடித்தால் சளி மற்றும் காய்ச்சல் அனைத்தும் குணமடையும். மேலும் கண்டங்கத்திரியை குழம்பு வைத்தால் அது மிகவும் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

        நுரையீரலில் உள்ள நீர் மற்றும் சளியை அகற்றும் பண்பு உண்டு.
தொண்டை பகுதியில் ஏற்படும் அனைத்து விதமான நோயையும் போக்கிவிடும் இவற்றை உட்கொள்ளும் போது.
தைராய்டு நோயையும் இவை குணமாக்கும்.
தூதுவளைக்கு இணையான மருத்துவகுணம் கொண்டது.

குறிப்பு;

      இவ்வளவு கடுமையான காரம் மசாலா பயன்படுத்தும் இந்தியாவில்
கத்தரிக்காய் பயன்பாடு உள்ளதால் அவற்றில் உள்ள வேதிபொருட்கள்
புற்றுநோயை அழிக்கும் தன்மை உள்ளதை
அறிந்த பன்னாட்டு கம்பெனிகள் மரபணு மாற்றம் செய்த கத்தரியை புகுத்தியுள்ளதாக ஒரு தகவல் உள்ளது.

Comments