உடல் எடையைக் குறைக்க..!!

                            நெல்லிக்காய்;


             தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையைக் குறைக்க முடியும்.

           ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் 'சி' தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் 'சி' ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

           நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம்.
விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.

           நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும. அழகான சருமத்தையும் பெறமுடியும். முடி கொட்டும் பிரச்சனையை முடிவு கட்டும். புதிதாக முடிகள் வளரும்.

          நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கண்பார்வை கூர்மையாகும்.. மாலைக்கண் வியாதி நீங்கும்.

            தேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்.
       உதடு வெடிப்பைப் போக்க, பாலாடையுடன் நெல்லிக்காய் சாற்றைக் கலந்து தடவலாம்.

உடல் எடையினை குறைக்கும் 
பூண்டு டீ;

        உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பலரும் பல உணவு முறைகளை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் சிரமமில்லாமல் கரைக்கும் வழிகள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் பூண்டு டீ.

 தயாரிப்பதுஎப்படி;

       மூன்று முதல் நான்கு பூண்டுப் பற்களை பொடித்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து அருந்தலாம்.
       பூண்டு டீ உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி கொழுப்புக்களை கரைக்கும் செயல்பாட்டினை அதிகரித்து உடல் எடையை வேகமாக குறைக்கும்.

தொப்பையைக் குறைக்க:

          தினமும் இரவில் அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமப்பொடி இரண்டு ஸ்பூன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு கொதித்தவுடன் அதை அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். காலை எழுந்து நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்கள் செய்து வந்தால் தொப்பை காணாமல் போய்விடும்.

Comments